கொரோனா கவிதைகள் - 3

யார்பக்கம்

இயற்கையும் பணமும்
எதிர்நீச்சல் போட்ட
இடைத்தேர்தலில்,
வைரஸென்ற
விருந்தாளி
வேட்பாளரின் விதியை
வித்தியாசமாய் வர்ணிக்க,
ஓட்டுபோட
விருப்பம் கொண்டு
வரிசையில் நின்ற
உயிர்களெல்லாம்,
நின்ற இடம் தெரியாமல்
நிழலைக்கூட மறைக்கிறது,
நிம்மதி தொலைத்து.
-
விக்டர் லாரன்ஸ், கும்பகோணம்
-

குடிமகன்கள் ?

மதுகுடித்த மகான்கள் 
எல்லாம்
மர்ம தேசத்து
மகரிஷி போல,
உண்ட மயக்கம்
உடலை முறைக்க
சாலையின் ஓரத்தில்
சங்கீதம் பாடி
சர்க்கஸ் காட்டினார்கள்,
சிட்டுக்குருவிக்கு.
அவர்களை காணா
அவலத்தில் ஏங்குகிறது,
சாலையோர சிட்டுக்குருவி,
வைரஸின் வில்வித்தையால்.

-
விக்டர் லாரன்ஸ், கும்பகோணம்

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD