கொரோனா கவிதைகள் - 2


கொரோனா கவிதைகள் - 2

விக்டர் லாரன்ஸ் - குடந்தை 

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +


நோயும் ஆயுதமாய்
ஆயுதம் வைத்து
அருகில் வராமல்
அணைபோட்ட
காலம் போய்,
நோய் வைத்து
நிம்மதி தொலைக்கும்
நூதன முறையை
நுழைத்துள்ளன
சில நீச உயிர்கள்.

                                   + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
நான்
நான்
அவணியில் வாழ
அடுத்தவர் அவசியமென்ற
அகராதியை
அறுதியிட்டு
அளந்துவிட்டது,
சீனாவிலிருந்து
சீறிப்பாய்ந்த
சிறிய வைரஸ்.
 + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
மாட்டு சாணத்தின் மகிமையை மறந்தவர்க்கு
மாட்டு சாணத்தை
மனையின் முன்பு
மணக்கச் சொல்லி
மருந்து சொன்னார்
முன்னோர்.
வளர்ச்சியின் முனைப்பில்
வளமையை மறந்து
மூடினோம் மண்ணை.
இருந்தாலும் என்னவோ
துணிச்சலுள்ள கொரோனா
தொண்டையில் நுழைந்து
தூண்டுகிறது நம்மை
முடிந்தால் என்னை
முடக்கிப் பாரென
சாணத்தில்

 + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
தனிமை
தனிமையின்
நோக்கத்தை ஏற்கா
நபர்களால் தான்
நானிலத்தின் நடுவில்
நங்கூரத்தை
நிறுத்திவிட்டு,
நானிலத்தவரை பார்த்து
நகையாடுகிறது வைரஸ்,
கொரோனா என்ற
கர்வத்தோடும்,
கௌரவத்தோடும்

 + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
உண்மை என்ன?
வைரஸ்
உலாவரும் வரலாறு
வையகத்தில் வைரலாக
விரைந்தாலும்,
பின்னணி மட்டும்
உடன்கட்டை ஏறிய
உத்தமியாய்
புதைந்த உடலுக்குள்
நகைத்துச் செல்கிறது,
நானிலத்தவரைப் பார்த்து,
உண்மை யாதென
உணர்த்தாமலேயே
           + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
ஏதாவது செய்
வைரஸ் பதிந்த
விரல்கள் பட்டதால்
வாழ்வை தொலைத்து
விண்ணை தொட்டவர்
வெகுவாக வளர்ந்திடினும்
வைரஸ் படாமலே
வைத்தியர் தொடாமலே
நான்கு சுவற்றுக்குள்
நகம் பதித்து
நாளைய வாழ்வை
நகர்த்தக்கூட
நாதியில்லாமல்
வாழ்வின் விலைதேடி
நீண்ட வரிசையில்
நகர்கிறவர்கள்தான்,
நானிலத்தில் நிறையபேர்.
முடிந்ததை செய்வோம்
முடியாதவர்க்கு
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD