இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 3


இயேசுவின்
உவமைகளும் உதாரணங்களும் - 3
- பா. கா. அலெக்ஸ் சகாயராஜ்
- - - - -

நற்செய்திப் பகுதி : மாற்கு 3:27  (மத்; 12:29 , லூக் 11: 21)
சூழ்நிலை:
இயேசு பெயல்சபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்ற  குற்றச்சாட்டு
உதாரணம்
வலியவரைக் கட்டினாலின்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது: அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.”
-----------------


இறைவார்த்தையில் ஆண்டவரை தேடுபவர்களே உங்கள் அனைவரையும் இப்புதிய வருடத்தில் புதிய நம்பிக்கையோடு தொடங்கியருக்கிற உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து புத்தாண்டு நல்லவாழ்த்துக்கள்.

இன்றைய மாதத்திற்கு மாற்கு நற்செய்தியாளர் மூலம் நமக்கு இயேசு வெளிப்படத்துகிற அடுத்த உதாரணம் தான் இப்பொழுது நாம் சிந்திக்கிறோம். இயேசுவின் காலத்திலும் சரி, பழைய ஏற்பாட்டிலும் சரி கொள்ளையிடுதல் என்கிற நிகழ்வு அக்காலச்சூழ்நிலையில் பொதுவாக இருந்ததாதினால் தான் என்னவோ கடவுள் மோசேவிடம் கொடுத்த கட்டளைகளில் ஒன்றாககளவு செய்யாதே” (வி..20:15)  என்று பார்க்கிறோம். களவு செய்ததற்கு பாவக்கழுவாய் பலிகள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை நாம் லேவியர்6:1-7 வரை பார்க்கிறோம். ஆகவே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம்முடைய கருத்தினை அந்த எளிய மக்களுக்கு தெளிவாக்க இந்த உதாரணம் மிகவும் ஏற்றதாக அமைகிறது

இந்த பகுதியில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு பொருள் கொள்ளையிடப்படுவது அங்கிருக்கின்ற வலிமையாலனைப் பொருத்;துதான் என்பது இயேசுவின் உதாரணத்தின் மூலம் நமக்கு வெளிப்படத்தப்படுகிறது. நல்ல சமாரியன் உவமையில் சமாரியனிடமிருந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்றால் சமாரியன் அந்த கொள்ளையர்களைவிட வலிமையில்லாதவனாக இருப்பதை நாம் உணருகின்றோம். இந்நற்செய்தியில் இயேசு பேய்களை ஓட்டும்போது ஏற்படுகின்ற விவாதத்தில்தான் இயேசு இந்த உதாரணத்தை பயன்படுத்துகிறார். அன்றைக்கு இயேசுவையே சாத்தான் சோதித்ததென்றால் இன்று நமக்கு முன்பும் சோதனைகளாக பல்வேறு  சாத்தான்கள் பலவழிகளில் தோன்றலாம். அவற்றை நாம் எப்படி சந்திக்க இருக்கிறோம். “அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” (தொநூ3:15) பிறந்திருக்கிற பாலன் இயேசு அவைகளைவிட வலிமையானவர் என்பதை உணர்ந்து, வலிமையுள்ள இயேசுவை அனைத்திற்கும் முன்னிருத்தி நம்மையும் நம் ஆன்மாவையும் காத்துக்கொள்வோம்.


கேள்வி: நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு யாரை வலிமையானவராக முன்னிருத்த  போகிறோம்?

கட்டுரையாளார்

இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 2

இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 2
பா. கா. அலெக்ஸ் சகாயராஜ்
= = = = = = = 
நற்செய்தி: மாற்கு 
பகுதி : மாற்கு 2:22  (மத்; 9:17 , லூக் 5: 37)
சூழ்நிலை: நோன்பு பற்றிய கேள்வி
உதாரணம்:  பழைய தோற்பையில் புதிய திராட்சை இரசம்


இறையேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே, ஆன்மீக மலரின் ஆன்மிக வாசககர்களே உங்களை மீண்டும் இந்த மாதம் வேறொரு இயேசுவின் உதாரணத்தின் விளக்கத்தோடு சந்திப்பதிலே மிக்க மகழ்ச்சியடைகிறேன்மாற்கு நற்செய்தியில் இயேசு பயன்படுத்தும் இரண்டாவது பொருளும் நோன்பு பற்றிய விவாதத்திலே தான் இடம் பெறுகிறது. “பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச்செய்யும்;: மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கு ஏற்றது.”
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப இருக்கின்ற பொருட்களை வைத்து அவர்களுடைய பேச்சு வழக்கு அமைவதுபோல இயேசுவின் காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற மற்றும் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருளைத்தான் இயேசு இப்பகுதியில் மேற்கோள் காட்டுகிறார்
இயேசு தன் கருத்தினை பகிர்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒன்றையொன்று சார்ந்தவனவாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இயேசுவின் காலகட்டத்திலேயும் அதற்கு முன்பேயும் அதற்கு பின்னும் சரி அப்பகுதியில் திராட்சையின் விளைச்சல் அதிகம் என்பதால் அவர்களின் எல்லா மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களிலும் திராட்சை இரசம் பயன்படுத்துவது அவர்களின் கலாச்சாரம். அவர்களுக்கு அதிகம் கால்நடைகள் இருந்தபடியால் அவைகளின் தோலை தோற்பைகளாக பயன்படுத்துவது அவர்களின் வழக்கமாக அமைந்திருந்தது. அம்மக்களுக்கு அவர்கள் பயன்படுத்துகிற பொருட்களை வைத்து தெளிவுபடுத்தலாம் என்கிற மனதோடு தோற்பையையும், திராட்சை இரசத்தையும் உதாரணமாக பயன்படுத்திருக்கிறார் இயேசு
இப்பொருட்களின் மூலமாக இப்பின்வரும் உண்மையை நமக்கு வெளிக்கொணர்கிறார். புதிய திராட்சை இரசம் கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையான அவரின் தியாகப்பலியை நமக்கு காண்பிக்கிறது. பழைய தோற்பையோ நமது பழைய மனநிலையை காண்பிக்கிறது
ஆக, இயேசுவையும் அவரின் போதனைகளையும் நாம் ஏற்றவர்களாக வாழவேண்டுமெனில் புதிய மனநிலையை அதாவது புனித பவுல் கூறுவதுபோலஇயேசுவின் மனிநிலைக் கொண்டவர்களாக மாற வேண்டும் (பிலி2:5)” இல்லையெனில் இயேசுவின் காலகட்டத்திலே வாழ்ந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், இறைவல்லுனர்கள் போல  கடவுள் ஒரு கருவியாக பயன்படுத்திய மோசே அளித்த பழைய சட்டதிட்டங்களையே பெரிதாக கருதிய அவர்களால் புதிய திராட்சை ரசமான கடவுளின் மகனான இயேசுவையும் அவரின் புதிய போதனைகளையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறையாட்சிக்கும் உட்பட இயலவில்லை. எனவே நாம் இயேசுவின் இறையாட்சிக்கு உட்பட, அவரின் மனநிலை கொண்ட மக்களாக வாழும்போது புதிய தோற்பையில் புதிய திராட்சை இரசத்தைப் போன்று பாதுகாப்பாக இறைவனின் கரங்களில் தவழ்வோம். இறைவனினட ஆசீர் பெறுவோம்.

கட்டுரையாளர்


இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 1

இயேசுவின்  உவமைகளும் உதாரணங்களும் - 1
பா. கா. அலெக்ஸ் சகாயரஜ்
= = =

தொன்று தொட்டு பழங்காலத்திலிருந்து எந்த ஒரு கருத்துப்பரிமாற்றத்திலும் குறிப்பாக பெரிய வகையில் மேடை உரையாயினும் சரி, சிறிய வகையில் சாதாரண அறிவுரையாயினும் சரி உவமைகளைக்கொண்டும், உருவகங்களைக்கொண்டும், உதாரணங்களைக்கொண்டும் விளக்குவது என்பது நமக்கெல்லாம் வெள்ளிடைமலை. 2000-ம் வருடத்திற்கு முன்பு வரலாற்றுப் பக்கங்களை பின்தள்ளிப் பார்த்தால் நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவும்கூட உவமைகள் வாயிலாகவே இறையாட்சியை செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்றிருக்கிறார் (மத்13:3). இன்றைக்கு சமூக ஊடகங்கள் எளிதாக செய்கின்ற பணியை அன்றைக்கு இயேசு கடினப்பட்டு சமூகங்களை ஊடுருவிச்சென்று பரப்பினார். ஏனெனில் செய்தியும் அவரே அதைக்கொண்டுச் செல்லும் ஊடகமும் அவரே
தந்தைக் கடவுள் பணித்ததை சிறப்பாக செய்ய, நற்செய்தியை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லஎளிய மக்களுக்கு எளிய இறைவனை எளிய வகையில் பறைசாற்றிட அவருக்கு இப்படிப்பட்ட யுக்திகளை கையாள வேண்டிய தேவையிருந்தது. அதனால்தான் என்னவோ உரைகளிலே உதாரணங்களையும், உதாரணங்களுக்காக உவமைகளையும், உவமைகளிலே உதாரணங்களையும், உருவகங்களையும் பயன்படுத்துவது அவரது எளிய பாணியாகவே அமைந்துவிட்டது
உன்னதரின் உவமைகளும் உதாரணங்களும் என்கிற இக்கட்டுரைப்பயணம் நற்செய்திகளில் இயேசு மொழிந்த உவமைகளிலோ அல்லது உருவகங்களிலோ உள்ள பொருட்களின் உள்ளார்ந்த பொருளை அறியும் வகையில் இனிவருகின்ற இக்கட்டுரைகள் அமையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. நற்செய்திகளிலே முதன், முதலாக எழுதப்பட்ட நற்செய்தியான மாற்கு நற்செய்தியிலிருந்து தொடங்கப்பட்டு பின்னர் அதன்பின்வரும் நற்செய்திகளிலிருந்து நம்முடைய இக்கட்டுரைப் பயணத்தை தொடரவிருக்கிறோம். தந்தைக் கடவுளின் ஆசீரோடும், அண்ணல் இயேசு பெருமானின் வழிகாட்டுதலோடும், தூய ஆவியின் சிந்தனைத் தூண்டுதல்களோடும், அன்னையின் அளவில்லா அன்போடும், பரிந்தோரையோடும், எனது அன்பார்ந்த வாசகர்கள் உங்கள் அனைவரின் செபங்களோடும் இக்கட்டுரைப் பயணத்தை தொடர்வதிலே மற்றும் பயணிப்பதிலே மிக்க மகிழ்ச்சி. உங்களின் கருத்துக்ளை முழுமையாக ஏற்கிறோம். வாருங்கள் இறைவனோடும் இறை ஆவித்தூண்டுதல்களோடும் பயணிக்க….
- - - - - - - - -  


நற்செய்தி: மாற்கு
பகுதி : மாற்கு 2:21 (மத்; 9:16 , லூக் 9: 56)
சூழ்நிலை: நோன்பு பற்றிய கேள்வி
உதாரணம்பழைய ஆடையில் புதிய துணி


நற்செய்திகளிலே மிகச்சிறிய நற்செய்தி மாற்கு நற்செய்தி. இந்நற்செய்தி யாரை மையப்படுத்தப்பட்டு எழுதப்பட்டது என்ற பின்னணியை பார்க்கும்பொழுது உரோமை நகரில் வாழ்ந்த புதியதாக மனமாற்றமடைந்த பிறஇனத்து கிறிஸ்துவர்களை மையப்படுத்தியதாக அமைகிறது. அவர்களின் துன்ப துயரங்களிலே இறைவன் இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கை கொடுக்கும் மற்றும் நலமளிக்கும் நற்செய்தியாக புனித மாற்கு இதனைக் கொடுக்கிறார். அவர்கள் மனந்தளராமல் இருந்திடவும், இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளின் மகன் என்று உரைத்திடவுமே இந்த நற்செய்தி எழுதப்பட்டிருக்கிறது என்பது இறையியலாளர்களின் கூற்றாக அமைகிறது
இவ்வகைப்பின்னணியில் இப்பகுதியை கவனிக்கும்போது இயேசு மாற்கு நற்செய்தயில் செயல்களின் வீரராக காண்பிக்கப்படுகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் மாற்கு நற்செய்தியின் இரண்டாம் அதிகாரத்திலேயே ஒரு ஒரு சிலர் இயேசுவிடம் நோன்பு பற்றிய விவாதத்தை மேற்கொள்கின்றனர். இவ்விவாதத்தை கையாளத்தான் இயேசு பெருமான்எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்: கிழிசலும் பெரிதாகும்என்று சொல்கிறார்
மாற்கு நற்செய்தியில் தொடக்கத்திலிருந்து இந்நிகழ்வுவரை இதுதான் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட பொருளாக நமக்கு தென்படுகிறது. இயேசு இவ்வுதாரணத்தை பயனபடுத்துவதற்கு சரியான ஒரு நபராக நான் பார்க்;கிறேன். ஆடையில்லாமல் இறந்து இம்மனுக்குலத்தின் ஆடையாக மாறிய இயேசுவுக்கு தெரிந்திருந்தது ஆடை மனிதனின் உடலை மறைக்கும் தேவை மட்டுமில்லையென்று, அது மனிதனின் அங்கீகாரம், அதனினும் மேலாக அடையாளம். லேவியிர் நூலிலே 16:29 –ல் இஸ்ரயேல் மக்களிடையே நோன்பின் முக்கியத்துவத்தை காண்கிறோம். தொடக்கத்திலே நோன்பு (லேவி23;:27) ஒருநாளாக இருந்ததை பின்வரும் நாட்களில் இந்த யூதர்கள் இன்னும் வெவ்வேறு நிகழ்வுகளுக்கும் நோன்பிருக்க வேண்டும் என்று தங்களின் காலஅட்டவணையை தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டனர். உதாரணத்திற்கு 586-ல் எருசலேம் ஆலயம் வீழ்த்தப்பட்டதற்கு மற்றும் மற்ற கலாபனைகளுக்கும் சேர்த்து நோன்பிருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். பரிசேயர்கள் வாரத்திற்கு இருமுறை நோன்பிருந்தனர்(லூக்18:12). இவ்வனைத்தையும் மேற்கோள் காட்டிதான் இயேசுவிடம் உங்கள் சீடர்கள் நோன்பிருக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அவர்களின் சிந்தனைகளை உள்ளுணர்ந்தவர்களாய், இயேசுவும் சரி, இந்நற்செய்தியின் வழியாக அவரை வெளிப்படுத்துகின்ற மாற்குவும் சரி மணமகனின் வழியாக இயேசு கடவுளின் மகன் என்பதை ஊர்ஜிதம் செய்கிறார். இயேசு தன்னுடைய புதிய இறையாட்சியி;ல் மக்களை வஞ்சிக்கின்ற  யூதர்களின் பழைய சட்டத்திட்டங்கள் ஏற்றதான ஒன்று அல்ல என்பதை பழைய ஆடையில் புதிய துணியை ஓட்டுவதில்லை என்பதை ரத்தினச்சுருக்கமாக வெளிப்படுத்துவதை நாம் பார்க்கிறோம்

கட்டுரையாளார் தொடர்புக்கு



விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD