விதைப்பவன் - அழிப்பவன்
சகோ. அமர்
-------------------------------------------------------------------------------------------------------
மண்ணையும், விண்ணையும் படைத்த இறைவன்உன்னையும், என்னையும் அழைத்த இறைவன்
உவமையின் வழியாக இன்றும் அழைக்கிறார்.
விதைப்பவன் இறைவன்
அழிப்பவன் மனிதன்
விதையெங்கு விழுந்தால் என்ன?சில மண்ணிலே உரமாகும்சில மண்ணிலே மரமாகும்.
சில விதை முள்செடியில் விழுந்தன
சில விதை வழியோரம் விழந்தன
சில விதை பாறையில் விழுந்தன
சில விதை நல் நிலத்தில் விழுந்தன
சில மட்டுமே உரமாயிற்றுசில மட்டுமே பயிராயிற்று
விதைப்பவனே அன்று விழுந்தான் - விதையாக
வழியிலே சவுக்கடி
பாறையிலே பயணம்
முள் காலிலே பாரச்சிலுவை
நல்ல நிலத்திலே நிலைவாழ்வு
விதைப்பவனே தன் உயிரை கொடுத்துநம் உயிரை காத்தார்.
ஆனால் நாமோ இன்று
முள்வேலி இல்லா பயணம்
பாறை இல்லா வழி
வழி இல்லா வாழ்க்கை - இது
நம்மை நல்வாழ்வுக்கு அழைக்காது.
நாம் விதைகளாக விண்ணிலே வாழ,மண்ணிலே மனிதத்தை விதைப்போம்.