சனிக்கிழமை சங்கதி - 3

சனிக்கிழமை சங்கதி - 3

கடவுள் என்ன செய்கிறார்? இருக்கிறாரா?

சகோ. மெரா 
----------------------------------------------------------------


உன் பீலிங்ஸ் எனக்குப் புரியுது
என்ன… என்ன… ஃபீலிங்குன்னு மனதில் ஓடும் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுவிட்டு… இருக்கட்டும்... இருக்கட்டும்… மே மாத வெயில், கொரோனா பீதி, இதில்  திடீர்னு கிளம்பிய வெட்டுக்கிளி கூட்டம் போதாக்குறைக்கு ஆம்பன் புயல் என நமது மனங்களில் மண்ணை வாரி இறைக்கும் இந்த வருடம் ஏன் பிறந்தது என்று கவலைப் படுபவர்களுக்கு சொல்லுகிறேன் “உங்கள் பீலிங்ஸ் எனக்குப் புரியுது.” 

இதன் மத்தியில் ‘யார் எக்கேடு கெட்டு போனால் என்ன! எந்த சூழ்நிலை ஆனால் என்ன? எனது கஜானா நிரம்பினால் போதும்’ என்று இருக்கிற பல பேதமை மேதாவிகள் நமது வாழ்க்கையில் இன்றும் குட்டிகரணம் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் நடுவில் பல நபர்களுக்கு ‘என்னய்யா இந்த கடவுள் இவ்வளவு சோதிக்கிறார். உண்மையில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என்ற பல கேள்விகளுக்கு தங்கள் மனதை உட்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். இப்போ அந்த மாதிரியான நபர்களுக்கு தான் நான் சொல்லப்போற சங்கதியே கிடக்கு.

சரி சங்கதி பேசலாம் வாங்க
“ஒரு தூரதேசத்தில் அந்த நாட்டின் முதல் குடிமகனிடம் வேலை செய்துவந்த ஒரு அலுவலக உதவியாளரின் மகன் திடீரென்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது சிறிய விபத்தினால் அவனது கையில் அடிபட்டு இரத்தம் கசிய ஆரம்பிக்கிறது. உடனே அடித்து பிடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து ஒரு பெரிய கூச்சலிட்டான். உடனே அவன் தந்தை மாலை வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்ததும் அவனை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவன் சமாதானம் ஆவது போல் தெரியவில்லை. உடனே அவன் தந்தை தன் மகனிடம் “Don’t worry my dear I understand your feelings!” என்று சொன்னார். 
உடனே அந்த மகன் என் உணர்வுகள் உங்களுக்கு எப்படி புரியும் என்று வினவினான்; உடனே அந்த தந்தையை பார்க்க வந்த ஜனாதிபதி, பிள்ளையின் அழுகுரலைக் கேட்டு அந்த பணியாளரின் வீட்டிற்குள் நுழைந்தார். பிள்ளையிடம் அவர் தந்தை கூறியது போன்று இவரும் கூறினார். மீண்டும் அந்தப் பிள்ளை ‘உங்கள் யாருக்கும் என் உணர்வுகள் புரியாது’ என வீல் என்று கத்திக்கொண்டு அலறினான். உடனே ஜனாதிபதி அவனருகில் அமர்ந்து ‘என் இரு கைகளையும் பற்றி பிடி’ என்றார். அந்த மகன் அவரது வலக்கையை பிடித்துவிட்டு இடது கையைத் தேடலானான். ஏனென்றால் ஜனாதிபதிக்கு இடது கை கிடையாது தனது வாழ்வில் நடந்த ஒரு பேராபத்தில் தனது இடது கையை இழந்துவிட்டார். ‘அன்று என் தந்தை என்னை காப்பாற்றவில்லை என்றால் நான் எனது வாழ்வையே இழந்திருப்பேன். இப்பொழுது சொல் உன் உணர்வுகள் எங்களுக்கு புரியாதா?’ என்று அப்பிள்ளையை பார்த்து கேட்டார்.”

ஆம் இதுதான் சங்கதி. பல நேரங்களில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற குழப்பத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நமது வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் அவ்வாறு நமது எண்ணங்களை மாற்றி அமைக்கின்றது. இதற்கு விடைகாண நமது ஜனாதிபதியின் இடதுகையை தேடவேண்டும். என்னடா இவன் இல்லாத கையை தேடு என்கிறானே! ஒருவேளை கிறுக்க இருப்பானோ? என்றுகூட எண்ணலாம். பரவாயில்லை… அவ்வாறு சொல்பவர்களின் எண்ணங்கள் இன்னும் அந்த சிறு பிள்ளையின் எண்ணங்களாகவே இருக்கிறது. என்னடா இந்த கடவுள் இவ்வளவு சோதிக்கிறார்… அந்த கடவுளுக்கு மனசாட்சியே இல்லையா? என்று கேட்பவர்கள் தயவுசெய்து இந்த சங்கதியை நன்றாக கேளுங்கள்.

விரைந்து சென்று கண்ணாடியை பாருங்கள் உங்களுடைய அழகு முகம் தெரியும். அதே நேரத்தில் ஆழ்மனதின் காயங்களும் தெரியும். இப்பொழுது கண்ணாடியில் இருப்பவர் நீங்கள் அல்ல. உங்கள் பிரச்சினைகளை தாங்கி நிற்கின்ற கடவுள். அப்பொழுது நான் தான் கடவுளா? அல்லது நீதான் கடவுளா? என்று தேவதூஷணம் செய்கிற ஆளாக என்னை பார்ப்பவர்களும் இருக்கலாம். நான் கூற வரும் கருத்து அது இல்லை. உங்களைப் பற்றி, நீங்களாகவே இருந்து, உங்கள் பிரச்சினைகளை அறியக்கூடிய கடவுள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அதனால் தான் அக்காலத்தில் கொடிய மரணமாகிய சிலுவை மரணத்தை ஏற்று முழு மனிதராக மறித்து நம் உணர்வுகளோடு கலந்து வாழ்கிறார். நம் இயேசு கிறிஸ்து. 

இந்த செயல்களின் மூலமாக நாம் அனைவரும் கடவுளை அறிய முற்படுகிறோம் அல்லது அவரது ஞானத்தை அறிய முற்படுகிறோம். அவ்வாறு அறிந்து புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இருப்பவர் கடவுளாகவே இருக்க முடியாதே? எனினும் இயேசு அந்த இரு பரிணாமங்களுக்கு பொதுவான இறைமனித உறவை நிறுவுகிறார். 

ஏதோ ஒரு கிறுக்கன் ஒரு சுவற்றில் இவ்வாறு எழுதி இருந்தானாம் 

“கடவுள் இறந்துவிட்டார்” - நீட்சே 

உடனே வேறு ஒருவன் அதற்கு கீழாக இவ்வாறு எழுதியிருந்தான் 

“நீட்சே  இறந்துவிட்டான்” - கடவுள்

மறை உண்மைகள் இல்லாத மதம் கடவுள் இல்லாத மதம் என்பர் அறிஞர் பெருமக்கள். அதுபோல கடவுள் நாம் வேண்டும் நேரத்தில் செயல்பட வில்லை என்பதற்காக அவர் செயல்படவே இல்லை என்று கூறுவது அபத்தமானது. இந்த நேரத்திலும் கூட ‘உன் கடவுள் பெரியதா என் கடவுள் பெரியதா’ என்று போட்டி போட்டுக் கொண்டு கடவுளை வியாபார பொருளாக மாற்ற பல மூடர்களும் கூட சமுதாயத்தில் சுருக்குப் பையில் போட்டுக் கொண்டு அலைகிறார்கள் சிலர். இவர்களைப் போன்றோருக்கு கடவுளும் காட்சிப் பொருளே. உண்மையான ஆன்மீகத்தை கொண்ட எவரேனும் கடவுளிடம் கொண்டுள்ள அன்பை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். இதைத்தான் அன்று இயேசு கிறிஸ்து "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து," என்று மத்தேயு 22:37-ல் கூறுகிறார். அதற்கு இணையாக "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்று இன்னொரு கட்டளையையும் கொடுக்கிறார். 

work from Home என்று பலர் இன்று வீடுகளை கார்ப்பரேட் கம்பெனிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இவ்வாறான ஒரு சந்தேகம் ஏற்படுவதில் அவ்வளவு பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. இருப்பினும் ஒரு மனிதன் தனது பணி வாழ்வையும் தன்னுடைய ஆன்மீக வாழ்வையும் ஒரு நேர்கோட்டில் அமைத்துக்கொள்ள முடியுமா? என்கிற ஒரு தேர்வாக கூட இந்த ஊரடங்கு நமக்கு பயன்படலாம்.

தீமைகளை அனுமதிப்பவர் கடவுளா? மனிதர் படும் துயரத்தில் மகிழ்பவர் கடவுளா? என்ற பல கேள்விகளை சில சங்கிகள் கேட்டாலும், தீமைகளுக்கு காரணம் யார்? என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். கடவுள் மனிதருக்கு சுதந்திரம் அளித்துள்ளார். அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, இயற்கையை நமது சிந்தனைக்கு இசைவுறச் செய்வது கடவுளின் செயலாக இருக்க முடியாது. எனவே மனிதர் சுயநல பயன்பாட்டிற்காக விதைத்த விதை இன்று மரமாக வளரும் போது அதைக் கண்டு மனிதர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தானே வேண்டும். அதை விட்டு விட்டு நாம் பெற்ற பிள்ளையை கொல்ல முயல்வதா? அது ஆபத்து என்று தெரியும் போது கடவுளை நினைத்துக் கொள்வது மட்டும் சரியா? 

எனவே எனது அருமை தோழர்களே கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பது இப்போதைக்கான கேள்வி அல்ல. இந்த ஊரடங்கு நேரத்தில் நம்மை காட்டிலும் உயர்ந்த, அதிகார அடக்குமுறைகளை, நம் கண்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு கருவியாக கடவுள் பயன்படுகிறார் என்று நினைத்துக்கொண்டு சரியாக நமது சுதந்திரத்தை வருகின்ற நாட்களில் பயன்படுத்துவோம். பொறுப்பற்று திரியும் அசட்டு வீரர்களுக்கு இந்த ஊரடங்கு சிறிதளவாவது பொறுப்பினை கற்றுக் கொடுக்கட்டும்.

நீ வேண்டிய நேரத்தில் கடவுள் வரவில்லை அல்லது தேவையானதை செய்யவில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்ற அர்த்தமில்லை. உனது உணர்வுகளை புரிந்து கொண்டவர் உன் கடவுள் எனவே வெட்டிப் பேச்சு பேசுவதை நிறுத்திவிட்டு வாழ்க்கைக்கு உகந்த நல்ல விஷயங்களை செய்ய முற்படுவோம். ஏழைகளை பாருங்கள் ஆதரவற்றோர் பாருங்கள் அவர்களில் நீங்கள் என்னை காண்கிறீர்கள் என்று மத்தேயு எழுதிய நற்செய்தி 25ஆவது அதிகாரத்தில் இயேசு அழகாக வெளிப்படுத்துகிறார். பல இடங்களில் உங்களை தேற்றுகிறார். எனவே மண்டைக்குள் இருக்கும் மண்ணாங்கட்டியை உடைத்தெறிந்து நல்ல நிலத்தில் நல்ல விதைகளை விதைப்போம். இன்று உங்கள் இறைவன் உங்களிடம் கூறும் ஒரே வார்த்தை “உன் பீலிங்ஸ் எனக்குப் புரியுது.”

விதைப்பவன் - அழிப்பவன்

விதைப்பவன் - அழிப்பவன்

சகோ. அமர்

-------------------------------------------------------------------------------------------------------
மண்ணையும், விண்ணையும்  படைத்த இறைவன்உன்னையும், என்னையும் அழைத்த இறைவன்
உவமையின் வழியாக இன்றும் அழைக்கிறார்.

விதைப்பவன் இறைவன்
அழிப்பவன் மனிதன்

விதையெங்கு  விழுந்தால் என்ன?
சில மண்ணிலே உரமாகும்
சில மண்ணிலே மரமாகும்.

சில விதை முள்செடியில் விழுந்தன
சில விதை வழியோரம் விழந்தன
சில விதை பாறையில் விழுந்தன
சில விதை நல் நிலத்தில் விழுந்தன

சில மட்டுமே உரமாயிற்று
சில மட்டுமே பயிராயிற்று

விதைப்பவனே அன்று விழுந்தான் - விதையாக
வழியிலே சவுக்கடி
பாறையிலே பயணம்
முள் காலிலே பாரச்சிலுவை
நல்ல நிலத்திலே நிலைவாழ்வு

விதைப்பவனே தன் உயிரை கொடுத்து
 நம் உயிரை காத்தார்.

ஆனால் நாமோ இன்று
முள்வேலி இல்லா பயணம்
பாறை இல்லா வழி
வழி இல்லா வாழ்க்கை - இது
நம்மை நல்வாழ்வுக்கு அழைக்காது.

நாம் விதைகளாக விண்ணிலே வாழ,
மண்ணிலே மனிதத்தை விதைப்போம்.

சனிக்கிழமை சங்கதி - 2 - அன்பு


சனிக்கிழமை சங்கதி - 2 

அன்பு - இது உங்கள் சொத்து 


சகோ. மெரா  

--------------------------------------------------------------
மே மாத அனலில் அவிஞ்சி போய் வெளியேயும் போகமுடியாமல் உள்ளேயும் இருக்க முடியாமல் இருக்கிற மக்களே! இன்றைய சனிக்கிழமை சங்கதி பேசலாம் வாங்க...
இப்போது இருக்கிற தலைமுறைக்கு அன்பு என்பதற்கான அர்த்தமே புரியாமல் போகிறது. பெஸ்ட் பிரண்ட் என்கிற காலம் போய் இப்போது பெஸ்டி என்று சொல்லிக்கொண்டு சுற்றுகிற காலம் ஆகிடுச்சு. இதைப்பற்றி பேசும்போது ஜெர்மனி நாட்டில் சின்ன பிள்ளைங்க எல்லாரும் தங்கள் பெற்றோர்கள் கைபேசியிலேயே காலத்தை கழிக்கிறார்கள் என்று கண்டனப் போராட்டம் செய்தது நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் கூட டிக் டாக்கில் ஆண்-பெண் இருவர் நண்பர்கள் என்ற பெயரிலே காதலர்களுக்கும் மேலாக தங்கள் நெருக்கத்தை காணொளியாக பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள்

சரி வாங்க இன்றைக்கு சங்கதி என்ன என்று தெரிஞ்சுப்போமே
கொரோனா ஊரடங்கினால் தன் காதலியை பார்க்க முடியாமல் தவித்த பையனுக்கு கள்ளக் கதவு திறந்தது போல நம்ம தமிழ்நாடு அரசால் திறக்கப்பட்டது டாஸ்மாக் கடைகள். அந்தப் பையனும் டாஸ்மாக் கடை திறந்த நாளிலிருந்து குடித்துக்கொண்டே இருந்தானாம். அப்போது அந்த வழியாக சென்ற பெரியவர்ஏன்டா தம்பி ஏன் இப்படி குடிக்கிற ?” என்று எப்பவும் உரிய பெரியவங்க தொனியில் கேட்டதுக்கு...  “நான் உனக்கு தம்பியா ? நீங்க என் கூட வா பிறந்தீங்க?” என்று வழக்கம்போல எகத்தாளமாக பேசிவிட்டு மீண்டும் குடிக்க ஆரம்பித்தான்அப்போது அந்த பெரிய மனுஷன் அந்த சின்னப்பையனோட பக்கத்தில் உட்கார்ந்து ஒரு கதை சொன்னார்.
நெதர்லாந்தில் 50 வருடமாக அலிடா என்ற ஒரு பெண்மணி புகைப் பழக்கத்துக்கு ஆளாகி நுரையீரல் வீணாய்ப் போன நிலையில் தன்னை விட்டு எல்லோரும் விலகிப்போய் தனியாய் வாழ்ந்தாராம். எவ்வளவு முயன்றும் அப்பழக்கத்தை விட முடியவில்லையாம். “
உடனே அந்த பையனுக்கு மனதுக்குள் ஒரு பீதி , “இந்தப் பெருசு நாம கலாய்த்ததுல சாபம் விடுகிறாரோ?” என்று எண்ணிக்கொண்டு "எதற்கும் கொஞ்சம் உஷாராகவே இருப்போம்" என்று நினைக்கிற வேலையிலே பெரியவர் கதையைத் தொடர்ந்தார்
"அலிடாவுக்கு அன்று ஒருநாள் லியோன் ஜேன்சன் என்கிறவர் மீது வயோதிகக் காதல் பூக்கிறது. லியோவும் அவர் மீது காதல் கொள்ள தன் புகைப் பழக்கத்தை விட்டொழித்தால்தான் நாம் திருமணம் செய்து இணைபிரியாமல் ஒருவருக்கு ஒருவர் அன்பில் வாழலாம் என்றார். அலிடாவும் மறுநாள் முதலே புகை பழக்கத்தை விட்டுவிட்டு புது மனிதை ஆனாராம்அதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது அலிடா கூறியதாவதுநான் மேற்கொண்ட இடைவிடா முயற்சி செய்ய முடியாததை என்னை ஆட்கொண்ட இணைபிரியா அன்பு செய்ததுஎன்று பதில் அளித்தாராம்."
சரி அதெல்லாம் இருக்கட்டும் நாட்டுக்கு என்ன நல்லது சொல்ல வருகிறேன் என்று கேட்கிறீர்களா?

சொல்றேன் கேளுங்க சங்கதிய
எல்லாமே அன்பு தாங்கஎன்று நான் கூறினால் 'போயா கிறுக்கன்னுசொல்கிற ஆட்கள் பலர் உள்ளனர். ஆனால் அன்பாகவே வாழ்ந்தவர் தான் இயேசு கிறிஸ்து. பாஸ்கா காலத்தினுடைய ஐந்து ஆறு வாரங்களில் பயணிக்கும் நமக்கு அன்பு பற்றி இயேசுவின் பகிர்வு நற்செய்திகளாக கொடுக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்த பிறகு சீடர்களுக்கு மறு அழைப்பு விடுக்கிறார் இயேசு. இம்முறை பேய்களை ஓட்டலாம், வல்ல செயல்கள் புரியலாம், இறையாட்சி மண்ணில் வரும் என்றெல்லாம் சொல்லாமல் அன்பை மட்டுமே மையமாக வைத்து ஆன்ம பிரமாணிக்கத்தை ஏற்படுத்துகிறார்

இங்கு அவர் அன்பு கொண்டவராக பேசவில்லை மாறாக அன்பாகவே பேசுகிறார். அவர் அன்பின் மறு உருவம் (1 யோவான் 4:8) என்பது நாம் அறிந்ததேஎனவே சீடர்களிடத்தில் பேசும் அவ்வார்த்தைகள் (யோவான் 15) இயேசு என்பவரின் தனி மனித அன்பு மட்டுமல்ல மாறாக முழு மனிதகுல அன்பிற்கு இட்டுச்செல்கிறது.

அது எப்படி என்றோ வாழ்ந்தவர் இன்று உள்ள என் மனித உணர்வுகளை உணர முடியும்? அதுவும் இந்த நவீன கால பிரச்சனைகளுக்கு எவ்வறு தீர்வாக இருக்க முடியும்? என்று வினவும் சங்கி மங்கிகளுக்கும் தான் திருஅவை அன்றே இயேசு 100% மனிதனும் 100% கடவுளுமாக இருக்கிறார் என்ற இறைக் கோட்பாட்டை பிரகடனப்படுத்தி இன்றைய நவீன புரிதலுக்கு விட்டுச்செல்கிறது.
அன்பர்களே இன்றைய கால அன்பு இச்சைக்கானதாகவும் பிச்சையெடுத்து பெருபனவாகவும் உள்ளது. அன்பு  அது புரிதலில் அமைய வேண்டும். கடவுளை நம்புவீர்களோ இல்லை நம்பாமல் இருப்பீர்களோ மார்ஸ் கிரகத்தில் மசாலா கேஃபே போடும் அளவுக்கு யோசிக்கும் மூலையை கொண்டுள்ள மனிதர்களை மரணத்தின் வாயில் வரை இமைப்பொழுதில் கொண்டு சேர்க்கும் ஆற்றல் அன்பிற்கு உண்டு என்றால் அது பொய்யே அல்ல (யோவான் 3: 16).
நாட்டை ஆளுவோர் நாட்டின் மீது அன்பு வைத்தால் நாசமாய் போகிற நிலைமை வரக் கூடுமோ? (லூக்கா13: 34)
அடுத்தவர் மீது அன்பு செலுத்தினால் நமக்கெதுவும் குறையுமோ? (மத்தேயு 22: 39)
பகைவர் மீதும் அன்பு செலுத்தினால் பாசக் கயிறும் தாக்குமோ? (லூக்கா 6: 27- 28)

அன்பைப் பற்றிப் பேசினால் பக்கங்கள் பத்தாது ஆனால் இன்று அதுவும் குறைந்துவிட்டது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உலகப்புகழ்பெற்ற கலைக்களஞ்சியத்தில் அணுவைப் பற்றி நான்கு வரிகளும் அன்பைப் பற்றி ஐந்து பக்கங்களும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதுவே இன்று எதிர்மறையாக அணுவைப் பற்றி ஐந்து பக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அன்பு என்ற வார்த்தையே அதில் இல்லை. எனவே அன்பு ஒருவரின் ஆளுமைக்கும் அழிவுக்கும் வித்திடும். அதை சரியாக கையாளாத போது ஒருவரின் உணர்வுகளையும் உடைத்துப் போடும் அளவுக்கு சக்தி மிகுந்தது. இந்த அன்பு என்பது எல்லா மதத்திலும் மதசார்பற்ற கொள்கைகளிலும் பொதுவான கருத்தியலாக அமைகின்றது.
அனைத்திலும் அன்பே சிறந்தது என்று புனித பவுலடியார் கூறுவது இதில் புலப்படுகிறது 1 கொரிந்தியர் 13 13.
உலக வரலாற்றிலேயே இயேசு ஒருவரைத் தவிர அன்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் யாரும் பிறக்கவில்லை பிறக்கவும் போவதில்லை ஏனெனில் அன்பே கடவுள் அல்லது கடவுள் அன்பாய் இருக்கிறார். நீங்களும் நானும் தாய் தந்தையின் அன்பினால் உருவானவர்கள். அன்பு மனிதராக பிறப்பெடுத்தவர்களின் பொதுச் சொத்து
அன்பு: இது உங்கள் சொத்து

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD