Showing posts with label புதினா. Show all posts
Showing posts with label புதினா. Show all posts

மருத்துவக் குறிப்பு - 6 - புதினா

புதினாவின் பயன்கள்


  • புதினா சோர்வைப் போக்கும். வெயில் காலங்களில் பசியெடுக்காது. பசி எடுப்பதற்கும் புதினா நல்லது
  • புதினாவை ஆய்ஞ்சு, அரைச்சு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடிச்சுட்டு வந்தா, காலை நேரப் பித்த மயக்கம், தலைவலி, காய்ச்சல், சிறு நீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்பு, வயிறு, குடல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
  • பிரியாணியோடு புதினா சட்னி சாப்ப்பிடுவது நல்லது
  • டீத்தூளுக்குப் பதிலாக, புதினாவை உலர வைத்துப் பொடி செய்து, புதினா டீ யாகக் குடிக்கலாம். இதனால் சுறுசுறுப்புக் கிடைக்கும்.
  • புதினாப் பொடியை தண்ணீரில் பொட்டு, உப்பு சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்தால், கரகரங்கிற குரல் கூட இனிமையாக மாறிடும். தொண்டை கரகரப்பு போயிடும். மாதவிடாய்க் கோளாரைச் சரிசெய்யும்.
  • புதினாவைத் தண்ணீர் விடாமல் அரைச்சு, தலைவலி, தசை வலி, நரம்புவலி, கீல்வாத வலி எங்கெல்லாம் இருக்கோ அங்கே பத்துப் போட்டால் வலி மறையும்.
  • புதினா கூட கறிவேப்பிலை சேத்து வதக்கி, உளுத்தம் பருப்பு , இரண்டு காஞ்ச மிளகாய் போட்டு வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைச்சு, துவையலைப் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டால், - வாய்க்கசப்பு, வயித்து வலி, காய்ச்சல் இருக்காது.
  • வறட்டு இருமல், சளி, ஆஸ்துமா, எலும்புருக்கின்னு அத்தனைக்கும் புதினாவில் வைத்தியம் இருக்கு. புதினாச் சாறோட, வினிகர், தேன், காரட் சாறு கலந்து மூணு வேளை குடிச்சாப் போதும், உடனே குணம் கிடைக்கும்
  • மூச்சு விடக் கஷ்டப் படுபவர்கள், புதினா கூட இஞ்சி, மிளகு சேத்துப் பச்சடி மாதிரி செஞ்சு சாப்பிடலாம்.
  • தொட்டில கூட புதினாவை வளர்த்துக்கலாம். புதினாவின் வாசனைக்கே பாம்பு, தேள், பூரான் எதுவும் வீட்டுக்குள் அண்டாது
----------------------------------------------------------------------------------------------

ஆதாரம்

  • ரேவதி  அவர்களின் “‘வைத்தியஅம்மணியும்,  ‘சொலவடைவாசம்பாவும்!,” - பக்பயன்கள் 40  - 43.

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD