இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 3


இயேசுவின்
உவமைகளும் உதாரணங்களும் - 3
- பா. கா. அலெக்ஸ் சகாயராஜ்
- - - - -

நற்செய்திப் பகுதி : மாற்கு 3:27  (மத்; 12:29 , லூக் 11: 21)
சூழ்நிலை:
இயேசு பெயல்சபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்ற  குற்றச்சாட்டு
உதாரணம்
வலியவரைக் கட்டினாலின்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது: அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.”
-----------------


இறைவார்த்தையில் ஆண்டவரை தேடுபவர்களே உங்கள் அனைவரையும் இப்புதிய வருடத்தில் புதிய நம்பிக்கையோடு தொடங்கியருக்கிற உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து புத்தாண்டு நல்லவாழ்த்துக்கள்.

இன்றைய மாதத்திற்கு மாற்கு நற்செய்தியாளர் மூலம் நமக்கு இயேசு வெளிப்படத்துகிற அடுத்த உதாரணம் தான் இப்பொழுது நாம் சிந்திக்கிறோம். இயேசுவின் காலத்திலும் சரி, பழைய ஏற்பாட்டிலும் சரி கொள்ளையிடுதல் என்கிற நிகழ்வு அக்காலச்சூழ்நிலையில் பொதுவாக இருந்ததாதினால் தான் என்னவோ கடவுள் மோசேவிடம் கொடுத்த கட்டளைகளில் ஒன்றாககளவு செய்யாதே” (வி..20:15)  என்று பார்க்கிறோம். களவு செய்ததற்கு பாவக்கழுவாய் பலிகள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை நாம் லேவியர்6:1-7 வரை பார்க்கிறோம். ஆகவே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம்முடைய கருத்தினை அந்த எளிய மக்களுக்கு தெளிவாக்க இந்த உதாரணம் மிகவும் ஏற்றதாக அமைகிறது

இந்த பகுதியில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு பொருள் கொள்ளையிடப்படுவது அங்கிருக்கின்ற வலிமையாலனைப் பொருத்;துதான் என்பது இயேசுவின் உதாரணத்தின் மூலம் நமக்கு வெளிப்படத்தப்படுகிறது. நல்ல சமாரியன் உவமையில் சமாரியனிடமிருந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்றால் சமாரியன் அந்த கொள்ளையர்களைவிட வலிமையில்லாதவனாக இருப்பதை நாம் உணருகின்றோம். இந்நற்செய்தியில் இயேசு பேய்களை ஓட்டும்போது ஏற்படுகின்ற விவாதத்தில்தான் இயேசு இந்த உதாரணத்தை பயன்படுத்துகிறார். அன்றைக்கு இயேசுவையே சாத்தான் சோதித்ததென்றால் இன்று நமக்கு முன்பும் சோதனைகளாக பல்வேறு  சாத்தான்கள் பலவழிகளில் தோன்றலாம். அவற்றை நாம் எப்படி சந்திக்க இருக்கிறோம். “அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” (தொநூ3:15) பிறந்திருக்கிற பாலன் இயேசு அவைகளைவிட வலிமையானவர் என்பதை உணர்ந்து, வலிமையுள்ள இயேசுவை அனைத்திற்கும் முன்னிருத்தி நம்மையும் நம் ஆன்மாவையும் காத்துக்கொள்வோம்.


கேள்வி: நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு யாரை வலிமையானவராக முன்னிருத்த  போகிறோம்?

கட்டுரையாளார்

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD