“நெல்லி”
- நம்ம ஊர்ல அதிகமா இருப்பது அரை நெல்லிக்காய்தான்.
- தினம் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தா உடம்பில் தெம்பு கூடி இருக்கும். தொற்று நோய் எதுவும் எளிதில் வராது.
- “வாய் துர்நாற்றம் வீசினா, நெல்லிக்காயைக் காய வெச்சு அந்தப் பொடியை வாயில் போட்டுக் கொப்புளிக்கணும்.
- கிணத்துத் தண்ணியில நெல்லிக் கிளை, இலையைக் கொஞ்சம் போட்டா தண்ணீர் இனிப்பா இருக்கும். இந்தத் தண்ணியில கண்ணைக் கழுவிட்டு வந்தா, கண் சிவக்கிறது, வலி, புண் எல்லாமே சரியாயிடும். சமையலும் ருசியா இருக்கும்.
- “பச்சை நெல்லிக்காய் கூட துளசி, கடுக்காய் தோலு, கறிவேப்பிலை எல்லாத்தையும் சேர்த்து அரைச்சுக்கணும். இந்த விழுதைத் துணியில மூட்டை மாதிரி உத்திரத்துல தொங்க விடணும். அதிலேர்ந்து துளித்துளியாய் சாறு வடிந்து விழும். இந்தச் சாறு அளவுக்கு மூணு மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சிக்கணும். இந்த எண்ணெயைத் தெனமும் தலைக்கு தடவிட்டு வந்தா முடி கொட்டுறது நின்னுடும். முடியும் அடர்த்தியா வளர ஆரம்பிச்சுடும்.”
- இள நரைக்கு: 20 நெல்லிக்காய் கூட எலுமிச்சை இலையைச் சேர்த்து நல்லா அரைச்சு பாலில் கலந்து, எங்கெல்லாம் நரை இருக்கோ, அங்க தடவி, ஒரு மணி நேரம் நல்லா ஊற வைக்கணும். மிதமா சூடு தண்ணீர்ல வாரம் ஒரு முறை குளிச்சுட்டு வந்தா, இள நரை இருந்த இடம் தெரியாம மறைஞ்சிடும்.”
- சர்க்கரை நோய்: நெல்லிச் சாறு கூட பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால், சர்க்கரை நோயைத் தடுத்திடும்.”
- “நெல்லிக் காய் உடம்புக்குக் குளிர்ச்சி. உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். மலமிளக்கி, சிறு நீர் பெருக்கியாகவும் இருக்கும்.“
---------------------------------------------------------------------------------
ஆதாரம் -
- ரேவதி அவர்களின் “‘வைத்திய’ அம்மணியும், ‘சொலவடை’ வாசம்பாவும்!,” - பக். பயன்கள் 48 - 52.
No comments:
Post a Comment