“வெங்காயம் இல்லைன்னா வியாதி வரும் பாரு”
- பக்க வாதாத்தையே போக்கும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு.
- தினமும் காலையில முருங்கைக் கீரையை வேகவச்சு, அதுல வெங்காயத்தைப் பொடிசா நறுக்கிப் போட்டு சூப் செஞ்சு குடிச்சா, ரத்த அழுத்தம் குறைஞ்சிடும். இன்னிக்கு
- வெங்காயத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தாலே போதும். உடம்புல இருக்கிற கொழுப்பெல்லாம் கரைஞ்சிடும். [வெறும் வெங்காயத்தை மென்னு தின்னா வாயெல்லாம் நாறும்தான் - ஆனா வயித்துக் கோளாறுனால வாய்ல வீசுற நாத்தத்தை விட வெங்காய வாசம் மேல்தானே].
- பல்வலி, ஈறு வலிக்கெல்லாம் வெங்காயம்தான் அருமருந்து. வெங்காயச் சாறையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளிச்சா, ஈறுவலி ஓடிப் போயிடும். வெங்காயச் சாறைப் பஞ்சில் நனைச்சு பல் ஈறுகள்ல தடவிட்டு வந்தா, வலி போயிடும்.
- உடல் உஷ்ணத்தைப் போக்கும் சக்தியும் வெங்காயத்திற்கு உண்டு.
- மாதவிடாய்க் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, மூல நோய், தலைவலி, ஜீரணக் கோளாறு, தொண்டை வலி அத்தனைக்கும் வெங்காயம்தான் மருந்து. தினமும் மூணு வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தாலே போதும், உடம்பு நல்லா வலுவா இருக்கும்.
- முடி உதிர்ந்த இடத்தில் வெங்காயத்தை தேச்சிகிட்டு வந்தா முடி நல்லா வளரும்.
- 6 வெங்காயத்தைத் தண்ணீருல கலக்கிக் குடிச்சா சிறுனீர்க் கடுப்பு, எரிச்சல் போகும்.
- சர்க்கரை நோய் உள்ளவங்க வெங்காயத்தை அதிகமா சேர்த்துக்கலாம்.
- நாய்க்கடி, பாம்புக்கடி, தேள்கடினு விஷத்தை முறியடிக்கிற குணமும் வெங்காயத்துக்கு உண்டு. அதனால எல்லா வயசுக்காரங்களும் தெனமும் வெங்காயத்தைச் சேர்த்துக்கணும்.
------------------------------------------------------
ஆதாரம் -
- ரேவதி அவர்களின் “‘வைத்திய’ அம்மணியும், ‘சொலவடை’ வாசம்பாவும்!,” - பக். 36 - 39.
No comments:
Post a Comment