“எலுமிச்சை”
- எலுமிச்சம் பழத்தோட வாசனை நம்மைப் புத்துணர்வு பெறச்செய்யும். யாரைச் சந்திக்கப் போனாலும் எலுமிச்சையோட போனா நம்மிடம் மகிழ்ச்சியோட பேசுவாங்க.
- “அடிக்கிற அனல் காத்துல உஷ்ணக் கட்டி, மூல உபத்திரவம், பித்தம், தலை சுத்தல், சிறுனீர் கழிக்க முடியாமப் போறது, மலச்சிக்கல், வயித்துப் போக்குன்னு எல்லா பிரச்சனையும் வந்திடுதே. அதுக்கெல்லாம் எலுமிச்சைதான் சர்வரோக நிவாரணி.”
- ரெண்டு மூணு நாள் எலுமிச்சை சாதத்தைச் சாப்பிட்டு வந்தா மூல நோயைக் கட்டுப் படுத்தலாம்.
- “எலுமிச்சைச் சாறுல மோர், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தைப் போட்டு, குடிக்கலாம். உடம்பு குளிர்ச்சியாயிடும்.”
- சீயக்காயுடன் எலுமிச்சம் பழச்சாறைக் கலந்து தேய்ச்சு குளிச்சா தலைமுடி ஆரோக்கியமா இருக்கும். சித்தம் தெளிய, எலுமிச்சைப் பழத்தைத் தலையில் தேய்ச்சு குளிச்சாப் போதும். மனசு அமைதியடையும்.
- தேள் கொட்டின இடத்துல எலுமிச்சம் பழத்துண்டை வெச்சு தேய்ச்சா, தேள் விஷம் பட்டுன்னு குறையும்.
- உடல் எடையக் குறைக்கனும்னு நினைக்கிறவங்க எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து வெறும் வயித்துல காலையில குடிச்சுட்டு வந்தா எடை குறைஞ்சிடும். சுறுசுறுப்பா வேலை செய்ய முடியும்.
- பரு வந்த வடு மாற - “தண்ணீரை நல்லா கொதிக்க வெச்சு, அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிஞ்சு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆவி பிடிச்சுட்டு வந்தா ரெண்டு வாரத்திலேயே மாசு மரு இல்லாம முகம் பளிங்கு மாதிர் மாறிடும்.
- பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் மறைஞ்சிடும்.
- எலுமிச்சம் பழச்சாற்றில தண்ணீரைக் கலந்து நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை குடிச்சுட்டு வந்தா நீர்க்குத்தல், நீர் எரிச்சல், வயித்துக் கடுப்பு கூட சரியாகிவிடும்.
-------------------------------------------------------------------------------------------------
ஆதாரம் -
- ரேவதி அவர்களின் “‘வைத்திய’ அம்மணியும், ‘சொலவடை’ வாசம்பாவும்!,” - பக். பயன்கள் 44 - 47.
No comments:
Post a Comment