மருத்துவக்குறிப்பு - 7 - எலுமிச்சை

எலுமிச்சை



  • எலுமிச்சம் பழத்தோட வாசனை நம்மைப் புத்துணர்வு பெறச்செய்யும். யாரைச் சந்திக்கப் போனாலும் எலுமிச்சையோட போனா நம்மிடம் மகிழ்ச்சியோட பேசுவாங்க.
  • அடிக்கிற அனல் காத்துல உஷ்ணக் கட்டி, மூல உபத்திரவம், பித்தம், தலை சுத்தல், சிறுனீர் கழிக்க முடியாமப் போறது, மலச்சிக்கல், வயித்துப் போக்குன்னு எல்லா பிரச்சனையும் வந்திடுதே. அதுக்கெல்லாம் எலுமிச்சைதான் சர்வரோக நிவாரணி.”
  • ரெண்டு மூணு நாள் எலுமிச்சை சாதத்தைச் சாப்பிட்டு வந்தா மூல நோயைக் கட்டுப் படுத்தலாம்.
  • எலுமிச்சைச் சாறுல மோர், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தைப் போட்டு, குடிக்கலாம். உடம்பு குளிர்ச்சியாயிடும்.”
  • சீயக்காயுடன் எலுமிச்சம் பழச்சாறைக் கலந்து தேய்ச்சு குளிச்சா தலைமுடி ஆரோக்கியமா இருக்கும். சித்தம் தெளிய, எலுமிச்சைப் பழத்தைத் தலையில் தேய்ச்சு குளிச்சாப் போதும். மனசு அமைதியடையும்.
  • தேள் கொட்டின இடத்துல எலுமிச்சம் பழத்துண்டை வெச்சு தேய்ச்சா, தேள் விஷம் பட்டுன்னு குறையும்.
  • உடல் எடையக் குறைக்கனும்னு நினைக்கிறவங்க எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து வெறும் வயித்துல காலையில குடிச்சுட்டு வந்தா எடை குறைஞ்சிடும். சுறுசுறுப்பா வேலை செய்ய முடியும்.
  • பரு வந்த வடு மாற - “தண்ணீரை நல்லா கொதிக்க வெச்சு, அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிஞ்சு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆவி பிடிச்சுட்டு வந்தா ரெண்டு வாரத்திலேயே மாசு மரு இல்லாம முகம் பளிங்கு மாதிர் மாறிடும்
  • பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் மறைஞ்சிடும்.
  • எலுமிச்சம் பழச்சாற்றில தண்ணீரைக் கலந்து நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை குடிச்சுட்டு வந்தா நீர்க்குத்தல், நீர் எரிச்சல், வயித்துக் கடுப்பு கூட சரியாகிவிடும்.

-------------------------------------------------------------------------------------------------

ஆதாரம்

  • ரேவதி  அவர்களின் “‘வைத்தியஅம்மணியும்,  ‘சொலவடைவாசம்பாவும்!,” - பக்பயன்கள் 44  - 47.

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD