கொரோனாவே கொஞ்சம் கேளு…
விக்டர் லாரண்ஸ் - கும்பகோணம்
----------------------------------------
வகவகயா நோயிருந்தும்
வயிரார உண்டுவந்தேன்.
உடம்பெல்லாம் புண்ணிருந்தும்
வாரம் ஒன்னில் வலிமறந்தேன்.
பிரியாணி இல்லனாலும்
பழங்கஞ்சி குடுச்சுவந்தேன்.
பீட்சாதான் இல்லனாலும்
பிஸ்கட்ட சாப்புட்டேன்.
சீனாவுல கூடுகட்டி
சிம்புளா வாழமறந்து,
டிக்கெட்கூட இல்லாம
டூருக்கு எப்டிப்போன?
விசா வர எனக்குந்தான்
வருசம் பல ஆகுதிங்க.
கால்கள்கூட இல்லாம
கடல்கள் பல தாண்டிட்டியே
டிசம்பரில் தொடங்கிவச்ச
திருவிழா கூட்டந்தான்
வெடிவச்ச தொடங்கிவக்க
விளக்கநீயும் கொடுக்கலயே.
தொண்டையில பொட்டுவெடி
வட்டமாவே வச்சுப்புட்ட.
நெருப்புக்கூட இல்லாம
நிக்காம வெடிக்குதிங்க.
தொழிற்சாலை ஒன்னமட்டும்
துண்டாக்கி போட்டிருந்தா
அழிச்சுப்புட்டு மறுவருசம்
அப்படியே கட்டிருப்பேன்.
ஆனாலும் உன்கோபம்
அதிகமாவே இருப்பதால
மனுசங்கள மட்டுந்தானே
மத்தளமா அடுச்சுப்புட்ட.
இந்தகோவம் எதனாலனு
ரெண்டுவரில சொல்லிடினா
பத்துநாளு முடிவுக்குள்ள
பரிகாரஞ் செஞ்சிடுவேன்.
வெவரம் தெரிஞ்ச மனுசனுக்கே
உன்னபத்தி புரியவில்ல
படிக்காத மனுச நாங்க
பக்குவமா எடுத்துச்சொல்லேன்.
இந்தசோகம் முடுச்சுக்கவே
இந்த வருசம் பத்தாதே
கொஞ்சம் நீயும் கோச்சுக்காம
கல்லறையில் கண்மூடு.
-லாரன்ஸ்
எங்கள் மறைமாவட்டத்தின் வைரம் முத்து = வைரமுத்து
ReplyDeleteஅருமை அருமை தம்பி
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள்
Super Thambi.👍
ReplyDeleteValthukkal💐💐
உணர்வு பூர்வமான கவிதை. வாழ்த்துக்கள்
ReplyDelete